Thursday, August 7, 2008

பூராக் விமானமும்-புண்ணாக்குகளும்.

பகுத்தறிவுவாதிகளுக்கு சவால் விடும் அளவுக்கு தங்களை அறிவாளிகளாக காட்டிக்கொள்ள இன்றைக்கு இஸ்லாமியர்கள் தொடங்கிங்கியுள்ளனர்.
 
ஆனால் மதங்கள் மனிதனை முட்டளாக்கி அவனை காட்டுமிராண்டியாக மாற்றும் என்பதை இன்றக்கு இருக்கும் உலகின் அனைத்து மதவாதிகளும் நிருபித்து வருகிறார்கள்.அதில் இஸ்லாமும்,முஸ்லீகளும் விதிவிலக்கல்ல.
 
உண்மை அப்படியிருக்கும்போது தி.கா. வுக்கு சாவால் என்று வாய்ச்சவாடல் வேறு ஒரு கேடா?
 
பொய்யையும்,புணை சுருட்டுகளையும் மதங்களாக ஏற்படுத்திக்கொண்டு அதற்கு பகுத்தறிவு ,விஞ்ஞான முலாம் பூசும் முட்டாள்கள் தாங்கள் யாருக்கு சவால்விடுகிறோம் என்று அறிந்து சவால் விடவேண்டும்.அதை விடுத்து வெறும் சவாடல்கல் எல்லாம் இங்கு இருக்ககூடாது.
 
உங்கள் குரான் ,மற்றும் கிரந்தங்கள் அனைத்தும் பொய்,உங்கள் கிரந்தங்கள் மட்டும் அல்ல உலகில் கடவுள் பெயரில் சொல்லப்படும் அனைதும் பொய் என்பதே தந்தை பெரியார் அவர்களின்  கூற்றாகும்.
 
இஸ்லாமை தந்தை அவர்கள் ஒரு சில நேரங்களில் ஆதரித்ததுக்கு காரணம் இஸ்லாம் சரி என்பதற்காகவோ,உங்கள் கிரந்தக்குப்பைகள் சரி என்பதற்காகவோ அல்ல.இந்தியாவின் இந்து மதக்குப்பைகளை விட உங்கள் குப்பை பரவாயில்லை என்பதுதான் காரணம்.ஆனால் அது உங்களுக்கு அங்கீகாரம் அல்ல.
 
ஏதோ தி.க பயந்துவிட்டது என்பது போல் கட்டுரை எழுதுகிறிர்கள்.இன்றைக்கு சொல்லுகிறோம் தலைவர் வீரமணி அவர்கள் சென்ற மாத உண்மை இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு இஸ்லாம் சிறுபாண்மையினார் அதுமட்டும் அல்ல இந்து மதம் அளவுக்கு மூட நம்பிக்கை கிடையாது என்றே பதில் அளித்துள்ளார்கள்.
 
உங்களுக்கு முடிவாக சொல்லிக்கொள்ளுவது என்னவென்றால் பகுத்தறிவாளனை சீண்டிப்பார்த்தால் உங்களின் புரட்டுகள் சந்தி சிரிக்கவைக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
 
பகுத்தறிவுவாதி
 
 
 
 
 
 

Wednesday, August 6, 2008

புஷ்பக விமானமும் புராக் விமானமும்-மூடநம்பிக்கை

மூடநம்பிக்கை

புஷ்பக விமானமும் புராக் விமானமும்

- இனியவன்

கற்பனையையும், அறிவியலையும் முடிச்சுப் போட்டு பொய்பேசிப் புலம்பும் மதம் ஒன்று உள்ளது. அது பார்ப்பன மதம் என்ற இந்து மதம். ஏதாவது ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டால் அது எங்கள் வேதங்-களில் அன்றே சொல்லப்-பட்டுள்ளது என்று புளுகுவார்கள். உதாரணத்திற்கு ஆகாய விமானத்திற்கு வேதத்தில் புஷ்பக விமானம் ஓர் புளுகாக எடுத்துக்காட்டப்பட்ட ஓர் அரிய0தொரு கட்டுரையாக உண்மை இதழ் 16-29, 2008இல் பெரியாரிடியாக இடித்துரைக்-கப்பட்டதை படித்தேன்.
இப்படிப்பட்ட புளுகு மூட்டைகள் இந்து மதத்தில் மட்டும் இன்றி, மற்ற மதங்களிலும் இந்த நச்சுக் காய்ச்சல் பரவ ஆரம்பித்-திருக்கிறது என்பதை நினைக்கும் போது வேதனை அளிக்கிறது. எடுத்துக்காட்டாக, மூடநம்பிக்கை அற்ற பகுத்தறிவு மார்க்கம் என்று புகழும் ஒரு சில புகழ்பாடிகளால் இஸ்லாம் மார்க்கமும் புளுகு மார்க்கமாக மாறி வருகிறது.
முகம்மது நபி கற்பனைப் பாத்திரமல்ல; அவர் ஒரு முன் மாதிரி. அதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு. அறிவியல் ரீதியான நிரூபணங்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவரை கற்பனைக் கதாபாத்திரத்தோடு ஒப்பிடுவது மடத்தனம் என்று உணர்வு பத்திரிகை அக்டோபர் 05.11.2007இல் வெளியான இராமர் விவகாரம் என்ற தலைப்பின் கட்டுரையில் டிஜே என்கிற ஆசிரியர் இந்து வெறியரான அத்வானியைச் சாடி எழுதியுள்ளார். அது ஆசிரியரின் எழுத்து ஜனநாயகம். மன்னிக்கவும், சுதந்திரம்.

எந்த மதமானாலும் அவரவர்கள் விருப்பம் போல் கதாபாத்திரத்தை அமைத்துக் கொண்டு கற்பனையாகவோ, நடந்த சம்பவத்தை நினைவூட்ட கதை, கவிதை, கட்டுரை என எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்வது அவரவர்களின் மத உரிமை. அதில் யாரும் தலையிடப் போவது இல்லை. ஆனால், அறிவியல் ரீதியான நிரூபணங்கள் உண்டு என வாதிட்டால்தான் நாம் இங்கே குறிப்பிட்டுக் குறுக்கிட வேண்டியுள்ளது. இது அறிவியலா-ளரின் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்-பாளர்களின் உரிமை இதை யாரும் தங்கள் விருப்பத்திற்குக் கூறிவிட இயலாது. அதற்கு ஆய்வு, நிரூபித்தல் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. இது தொடர்பாக ஒரு சில கேள்விகளை நான் இக்கட்டுரையின் மூலமாக எழுப்புகிறேன்.
இராமன், இலட்சுமனன், சீதை மூவரும் அயோத்தி மாநகருக்கு புஷ்பக விமானத்தில் (?) வந்திறங்கினர் என்பதாக இராமாயணம் கூறுகிறது.
முகம்மது நபி அவர்கள் புராக் என்ற மிருக விமானத்தில் ஏறி மிஹ்ராஜ் என்கிற விண்-வெளிப் பயணம் சென்றதாக இஸ்லாம் மார்க்கத்தில் நம்பப்படுகிறது (நூல்: புகாரி, 3207).
இராமன் சென்ற புஷ்பக விமானமும், முகம்மது நபி சென்ற புராக் விமானமும் எந்த வகையில் வேறுபட்டிருக்கிறது?
புராக் விமானத்தில் முகம்மது நபி அவர்கள் பயணம் செய்த நிகழ்ச்சி அறிவியல் ரீதியான நிரூபணங்கள் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்?
எரிபொருள், விமானம் இவை கண்டு-பிடிக்காத காலத்தில் மேற்கூறிய கடவுளர்களின் விமானங்கள் (புஷ்பக, புராக்) எந்த ஆற்றலின் உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது?
மேற்கண்ட இருவரின் பயணங்களில் யாருடைய பயணம் உண்மையானது? யாரு-டைய பயணம் கற்பனையானது? யாருடைய பயணம் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டது? விளக்கம் தர இயலுமா மதவாதிகளால்?
இதேபோல் புராக் என்ற மிருக வாகனம் தன் பார்வை எட்டிய தூரத்தில் அது தன் குளம்பை எடுத்து வைக்கின்றது (நூல்: முஸ்லிம் 234)
அதாவது ஒரு படி எடுத்து வைக்கும் அளவு தன் பார்வை எட்டிய தூரமாம். முறையான தூர அளவு குறிப்பிடக்கூட இயலாத ஆற்றல் வாய்ந்தது தான் இறையாற்றல் என்பதை அறிந்து கொள்ளலாம்.
விஷ்ணு குள்ள வாமணன் அவதாரம் எடுத்து பூலோகம் வந்து அரசனிடம் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டான். அரசனும் வரம் கொடுத்தவுடன் குள்ளவாமணன் வானுயர வளர்ந்தான். ஓரடியால் விண்-ணையும், ஈரடியால் மண்ணையும் மூன்றா-மடிக்கு இடமில்லாததால் தன் தலைமீது வைக்க சொன்னான் அரசன், அதனால் அசுர குலமே அழிந்ததாக ஒரு கதை உண்டு.
மேற்கண்ட இரு மதக் கருத்துகளில் என்ன வேறுபாடு இருக்கிறது?
மேற்சொன்ன இரு மத நிகழ்ச்சிகளை அறிவியல் ரீதியாக நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கிறது? எனவே கடவுள் என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் ஆற்றல், அதாவது இறை ஆற்றலினால் தான் இவ்விரு சம்பவங்களும் நடந்ததாகக் கதை அளக்க முடியுமே தவிர, அதில் அறிவியல் உண்மை இருப்பதாக ஒருபோதும் இவர்களால் நிரூபித்துக் காட்ட முடியாது என்பது இதன்மூலம் நிரூபிக்கப்-பட்டு விட்டது.
இதற்கு எடுத்துக்காட்டாக இறை ஆற்றல் என்ற கற்பனை ஆற்றலினால் இன்றுவரை எந்த வாகனமும் விண்ணிலும், மண்ணிலும் செலுத்த முடியவில்லை என்பதே இதற்கு ஆதாரமாகும்.
1,400 ஆண்டுகளுக்கு முன் செலுத்தப்பட்ட இறைவன் (?) வாகனம் அற்புதம் என்றால், தினம் தினம் ஒரு விண்கலம் செலுத்தப்-படுவதற்கு பெயர் என்ன?
எந்த வித எரிபொருளும் இல்லாமல் விண்ணில் செலுத்தப்படுவதுதான் இறை-யாற்றல் என்றால், அதே இறை ஆற்றலினால் இன்று விண்ணில் வேண்டாம், தரையில் கூட வாகனங்களை இயக்க முடியாமல் இருப்-பதற்குப் பெயர் தான் இறை ஆற்றலா?
எனவே வேதங்கள் அறிவுரை நூல்களே தவிர அறிவியல் நூல் ஆகாது. அது போல் அதில் கூறப்படும் கருத்துக்கள், அதில் உள்ள நிகழ்ச்சிகள் யாவும் அறிவியல் தொடர்பு அற்றது என்பதே உண்மை... உண்மை... உண்மை...
எனவே புஷ்பக விமானம், புராக் விமானம் உண்மை நிகழ்ச்சியா? கற்பனையா? மூடநம்பிக்கையா? இதற்கு உரியவர்களே! அறிவியல் ரீதியாக ஆதாரத்துடன் நிரூபிக்க வாருங்கள். அல்லது அந்தக் கற்பனைக் கடவுளை நிரூபிக்கச் சொல்லி ஆதரவு தேடுங்கள். எத்தனையோ அற்புதங்களை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்து காட்டிய அந்த வல்ல இறைவனால் (?) இன்று முடியாதா என்ன?
அறிவியலுக்கு ஜால்ரா அடித்து தங்களின் வேதங்களையும், கடவுள்களையும் காப்பாற்றிக் கொள்ளும் நிலையை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் இது போன்ற பெரியாரின் பகுத்தறிவுச் சவுக்கடி இன்னும் தொடரும்...
எல்லாம் கடவுள் செயல் (?) என்ற மூடநம்பிக்கைக் கருத்துகள் வேண்டுமானால் மதவாதிகளின் போதனையாக இருக்கலாம். ஆனால், அதுதான் அறிவியல் என்ற தவறான கருத்துகளைப் பரப்பி மக்களை மடையர்-களாக்க முயற்சிக்க வேண்டாம் என இக்கட்டுரையின் மூலம் கேட்டுக் கொள்கிறேன். மீறினால் இது போன்ற பகுத்தறிவுக் கேள்வி(கணை)களுக்கு விடைகாணத் தெரியாமல் தடுமாற நேரிடும்.

Wednesday, April 30, 2008

பெண்களை தோலுரிக்கும் ஆண் வக்கிரம சிந்தைகள்

தந்தை பெரியார் அவர்கள் எந்த மதத்தையும் அங்கீகரிக்கவில்லை

.உலகில் மதங்கள் அனைத்துமே மூட நம்பிக்கையை உண்டு பண்ணுகிறது.அதனால் அவற்றை அழித்தொழிக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பம்.

ஆனால் தந்தை அவர்கள் எதோ இஸ்லாம் மதத்தை ஆதரித்தது மாதிரியான ஒரு மாயையை இன்று இணைய உலகில் உருவாக்கி வருகின்றனர்

.இந்து மதமும்,கிறிஸ்தவமும் எவ்வளவு கொடியது என்று உலகில் அனைவரும் அறிவர்.ஆனால் அதை விட கொடியது இந்த இஸ்லாம்.

உலகில் ஜாதிக்கொடுமைகளை உலகில் அறிமுகப்படுத்தி மனிதனை கீழ்சாதிக்காரனாக பிரித்து அவமானம் செய்த கொடுமை இந்து மதத்தையே சாரும்

.

கிறிஸ்தவமும் இதற்கு விதி விலக்கல்ல

.வெள்ளை,கருப்பு என்ற பிரிவுகளும்,பாதிரிக்களின் அரசியலும் அதனை சீர்குலைத்து விட்டது.

ஆனால் இவைகளை எல்லாம் எடுத்து சாப்பிடும் விதமாக பெண்ணடிமை வேரை உலகில் பதித்தது இஸ்லாம்

.இன்று மதத்தின் பெயரால் மனிதனை அழித்து ஒழிப்பதில் முன்னனியில் நிற்பது இஸ்லாம்.ஆகவே இவைகள் எதுவும் யோக்கியமானவை அல்ல.இப்படி இருக்க தந்தை அவர்கள் எதோ இஸ்லாமை ஆதரித்தது போல இந்த பாஸிஸ கும்பல் அடையாளம் காட்டி தன்னை அறிமுகப்படுத்துவது வண்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

முதலாவது மதங்களை தாக்குவது என்பது அந்த மதத்தின் தாக்கங்களை குறைப்பது என்பதுதான் நோக்கமாக இருக்கவேண்டும்

.அந்த மதங்களால் மக்களுக்கு ஏற்படு கொடுமைகளை குறைக்க பாடுபட வேண்டும்.ஆனால் பெண்களை இன்றைக்கும் அடிமைகள் முக்காடிட்டு ரோட்டில் அழைத்துசெல்லும் ஒரு மதம் இருப்பதை விட அழிந்தொழிப்பது நலம்.

ஆனால் அதற்காக பெண்களை தோலுரிக்கும் ஆண் வக்கிரம சிந்தைகளையும் நாம் ஆதரிக்க வில்லை

.அதுவும் கண்டிக்கப்பட வேண்டியதே

Saturday, March 1, 2008

தர்மம் செய்வது அக்கிரமம்

தர்மம் செய்வது அக்கிரமம்

தர்மம் அதாவது ஏழைகளுக்குப் பிச்சை இடுதல் முதல் மற்றவர்களுக்குப் பலவித உதவிகள் செய்வது என்பதுவரை, அனேக விஷயங்கள் தர்மத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தர்மத்தைப் பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை பிச்சை கொடுத்தலை மிக நிர்பந்தமாகக் கட்டாயப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.

எப்படியெனில், தர்மம் கொடுக்காதவன் பாவி என்றும் அவன் நரகத்துக்குப் போவான் என்றும், கடவுள் அவனை தண்டிப்பார் என்றும் இப்படியெல்லாம் பயமுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள் வாக்கெனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்து மதம் என்பதில் தர்மத்தை 32 விதமாகக் கற்பித்து 32 தர்மங்களையும் ஒருவன் செய்ய வேண்டும் என்றும், அந்தப்படி செய்தால் அவனுக்கு இன்ன இன்ன மாதிரி புண்ணியம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

அதுபோலவே, இஸ்லாம் மதம் என்பதிலும் அன்னியனுக்குப் பிச்சை கொடுத்தாக வேண்டும் என்றும், அது ஒருவனுடைய வருஷ வரும்படியில் அவனது செலவு போக மீதி உள்ளதில் 40இல் ஒரு பாகம் வருஷந்தோறும் பிச்சையாக பணம், சாப்பாடு, துணி முதலியவைகளாய் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படி செய்யாவிட்டால், மதத் துரோகம் என்றும் இந்தப்படி செய்யாதவன் இஸ்லாம் ஆகமாட்டான் என்றும்கூட கூறப்படுகிறது.

அதுபோலவே, கிறிஸ்தவ மதத்திலும் தர்மம் கொடுக்க வேண்டியது மிக முக்கியமானதென்றும், தர்மம் செய்யாதவனுக்கு மோட்சமில்லை என்றும், உதாரணமாக ஒரு ஊசியின் காதோட்டை வழியாக ஒரு ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே ஒழிய, பிச்சை கொடுக்காத பணக்காரன் ஒரு காலமும் மோட்சத்துக்குப் போக மாட்டான் என்றும் சொல்லப்படுகிறது.
செல்வம் என்பது உலகத்தின் பொதுச் சொத்து. அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்த ஜீவனுக்கும் அது பொதுச் சொத்தாகும். ஆனால், அந்தப் பொதுச் சொத்தானது பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பேராலும் ஒருவனுக்கு அதிகமாய்ப் போய்ச் சேரவும், மற்றொருவனுக்கு சிறிதுகூட இல்லாமல் தரித்திரம், பசி முதலியவை அனுபவிக்கவும் ஆன தன்மை உண்டாக்கப்படுகிறதே ஒழிய, மற்ற எந்தக் காரணத்தாலும் எவனுக்கும் இல்லாமல் போக நியாயமே இல்லை.

இந்தப்படி செய்வது முடியாத காரியம் என்று யாராவது சொல்லுவார்களானால், ரஷ்யாவில் லெனின் என்ற ஒரு மனிதன் இந்தப்படி உத்திரவு போட்டு பணக்காரரும், பிச்சைக்காரரும் இல்லாமல் செய்துவிட்டாரே! இவர் கடவுளுக்கும் பெரியவரா என்று கேட்கிறேன். ஆதலால் தர்மம் பிறத்தியானுக்கு பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவுவது என்கின்ற முறைகள் எல்லாம் பணக்காரத் தன்மைக்கு அனுகூலமானதே தவிர பணக்காரத் தன்மையைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டதே தவிர, அவை ஒரு நாளும் ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் அனுகூலமானதல்ல.
ஏனெனில் பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்கின்ற காரியங்களால்தான், இல்லாத ஏழை மக்களை தரித்திரவாசிகளான மக்களைப் பிரித்தாள முடியும். ஏழை மக்கள் பிரிந்திருந்தால்தான் பணக்காரர்கள் வாழ முடியும். அன்றியும் பணக்கார மக்கள் மீது ஏழைமார்களுக்கு குரோதமும் வெறுப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்ற காரியத்திற்காகவே தர்மம் என்பதும், ஜக்காத் என்பதும், பிச்சை என்பதும் கற்பிக்கப்பட்டதே ஒழிய, பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதற்கோ அவர்களைக் காப்பாற்றுவதற்கோ ஏற்பட்டதல்ல.

எது எப்படி இருந்த போதிலும், உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழ வேண்டுமானால், பிச்சை கொடுப்பதும் பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியமாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான் மனிதன் சுயமரியாதையோடு வாழ முடியும். பிச்சை கொடுக்கும் வேலையை சர்க்காரே எற்றுக் கொண்டு அதற்குப் பணம் வேண்டுமானால், பணக்காரரிடம் இருந்து பிச்சை வரி என்று ஒரு வரியை கிறிஸ்து சொன்ன கணக்குப்படியோ, சர்க்கார் வசூலித்து, அதற்கு ஒரு இலாக்கா வைத்து விநியோகிக்க வேண்டும். அந்தப் பிச்சையை சர்க்கார் தொழிற்சாலைகள் வைத்து, அதன் மூலம் பிச்சைக்காரர்களிடம் வேலையை வாங்கிக்கொண்டு விநியோகிக்க வேண்டும். இந்தக் காரியத்துக்காக சர்க்கார் எந்தத் தொழிற்சாலை வைக்கிறார்களோ, அந்த மாதிரி தொழிற்சாலையை மற்றவர்கள் வைக்காமல் தடுத்துவிட வேண்டும்.

இப்படிச் செய்தால் பணக்காரர்கள் ஏற்பட்டு நாசமாய்ப் போனாலும், பிச்சைக்காரர்கள் தொல்லையாவது இல்லாமல் போய்விடும். பணக்காரத் தன்மை ஆட்சியில்லாத தேசம் எதிலும் இந்தக் காரியம் சுலபமாய் நடத்தலாம். ஆகவே, தர்மம் செய்வது அக்கிரமம் என்றும் ஜன சமூகத்துக்குத் தொல்லை என்றும், பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும் சொல்லுகிறேன்.

21.4.1945 அன்று 'குடி அரசு' இதழில் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் எழுதிய தலையங்கம்

 

http://periyaarr.blogspot.com/2008/02/blog-post_29.html

Sunday, February 10, 2008

திருமணங்களை சட்டவிரோதமாக்க வேண்டும்-பெரியார்

மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்தி விட்டன. குறிப்பாக, பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப் போலத்தான் மக்களில் சரிபகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிப்போடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள்.

பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்குப் பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் 'கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான் தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!

தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப' என்று இருக்கிறதே. "மேலோர் இவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காதிய கரணமும் உண்டே' என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்ததெல்லாம், சூத்திரர்களுக்குத் திருமணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.

பெரும் பகுதி மக்களைச் சூத்திரனாக்க உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் பெண்களை அடிமையாக்க 'கலியாணம்' என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால், அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள். இதைத்தான், நமது இதிகாசங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.

வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதியிருக்கிறானே தவிர, ஆண்களோடு சரிசமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே. ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?

முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?

நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.

பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?

"நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "Proposed Husband and Wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.'' என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?

பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 'விடுதலை' நாளேட்டில் 28.6.1973 அன்று எழுதிய கட்டுரை

Thursday, February 7, 2008

பெண் உரிமை பற்றி பெரியார்- இறுதி பகுதி

பெண்களை வீட்டுவேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள். (கு.8.3.36;14:3)

இன்று நம்முடைய சமுதாயத்திற்கு இருக்கும் குறைகளுக்கும் அவமானத்திற்கும் நம் மூடநம்பிக்கைகளே காரணமாகும். அதுவும் நம் தாய்மார்களிடம் இவ்வளவு இருக்குமானால் பிறகு அவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளின் நிலை என்னாவாகும்?எந்தச் சீர்திருத்தமும் பெண் மக்களிடம் இருந்து வந்தால் அதற்கு வலிவு அதிகம். (கு.27.10.40;3:3)

இன்றையப் பெண்கள், வெறும் அலங்காரத்தோடு திருப்தியடைந்து விடுகிறார்கள், அல்லது திருப்தி செய்யப்பட்டு விடுகிறார்கள். எனவே இவர்களுக்கு விடுதலை வேட்கை பிறப்பது அரிதாயிருக்கிறது. (வி.26.5.58;1:பெ,செ.)

குழந்தை மணம் ஒழிந்து, திருமண ரத்து, விதவைமணம்,கலப்புமணம், திருமண உரிமை ஆகியவைகள் இருக்குமேயானால் இன்றுள்ள விபசாரத்தில் 100-க்கு 90 பகுதி மறைந்து போகும். (வி.21.3.50;பெ.செ.)

பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம், ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கின்றாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதனால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருசுபடுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்கள். ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின்றார்கள். அன்றியும், அப்பிள்ளை பெறும் தொல்லையால் அவர்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம்ஏற்பட இடமுண்டாகி விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும். (கு.12.8.23;10:3)

ஆதி திராவிடர்கள் மதம் மாறுதல்-பெரியார்

ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்! - (பெரியார் சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. 'குடி அரசு' 2.8.1931)

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், 'இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்